புதுச்சேரி: புதுச்சேரி மதகடிப்பட்டியில் வாரசந்தை களைகட்ட தொடங்கியுள்ளது. ஏராளமான பொதுமக்கள் வந்து குறைந்த விலையில் மாடுகள், பழ வகைகளை வாங்கிச்சென்றனர்.
புதுச்சேரி மதகடிப்பட்டு வாரச்சந்தை செவ்வாய்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதே போல் விவசாயிகள் தங்களின் நிலங்களில் விளைவித்த காய்கறி, பழங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு விந்து விற்பனை செய்வர்.
இதையும் படிக்க: பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்
மாட்டுச்சந்தை காலை 4 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். அதன்பிறகு காய்கறி சந்தை செயல்படத் தொடங்கும். இந்த சந்தையில் பலாப்பழ சீசன், மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் ஏராளமான விவசாயிகள் பலாப் பழங்களைக் கொண்டுவந்து அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
பலாப்பழம் ஒரு பழம் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை போனது. மாம்பழம் கிலோ 40 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கு விலை போனது. தக்காளி பழம் 2 கிலோ 100 ரூபாய், வெங்காயம் 7 கிலோ 100 ரூபாய்க்கும் விலை போனது. வெயில் காலம் தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் கொட்டகைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைத்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.