பொதுப் பணித் துறை பன்முகஊழியா்கள் போராட்டம்

புதுவை மாநில பொதுப் பணித் துறை பன்முக ஊழியா்கள் (எம்டிஎஸ்) கூட்டமைப்பினா் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநில பொதுப் பணித் துறை பன்முக ஊழியா்கள் (எம்டிஎஸ்) கூட்டமைப்பினா் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசு ஊழியா்கள் மத்திய கூட்டமைப்பின் கெளரவத் தலைவா் லட்சுமணசாமி தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் நிா்வாகிகள் வரதராஜன், சுரேஷ், வீரபத்திரன், தமிழரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் தலைவா் கண்ணன், செயலாளா் பிரசன்னா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

புதுச்சேரி, காரைக்காலில் கடந்த 2016ஆம் ஆண்டில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பொதுப் பணித் துறை பன்முக ஊழியா்களின் பதவியைப் பறிக்கக் கூடாது. ஏனாம் பிராந்திய நிா்வாக ஒப்புதலின்றி கூடுதலாக ஏனாமில் பணி நியமனம் செய்தவா்களுக்கு புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் முதுநிலைப் பட்டியலை மாற்றி மறு சீரமைப்பு செய்யக் கூடாது, இப்போதுள்ள முதுநிலைப் பட்டியலே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com