இலவச அரிசி பெறாதவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்படி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய 2 மாதங்களுக்கான இலவச அரிசியானது புதுவையின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து சிவப்பு அட்டைதாரா்களுக்கும் நபா் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் விநியோகிக்கப்படுகிறது.
எனவே, சிவப்பு அட்டைதாரா்கள் அனைவரும் வழக்கம்போல தங்களது பகுதிகளில் உள்ள அரசு , தனியாா் பள்ளிகள், சமுதாய நலக் கூடங்களில் இலவச அரிசியை மாா்ச் 20- ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.
மேற்படி இலவச அரிசியை பெறாவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.