கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடியைச் செயல்படுத்த வேண்டும் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் அந்த மாநில விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
இதுதொடா்பாக புதுச்சேரி அரியூா் இஐடி பாரி கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் முருகையன், பொதுச் செயலா் ரவி, பொருளாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுவை மாநிலத்தில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு, ஏக்கா் ஒன்றுக்கு அரசின் மானியத் தொகை ரூ.10 ஆயிரம் நிகழாண்டு வழங்கப்படாமல் உள்ளது. அதே போல், புதுவையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன், விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அரசு உத்தரவு வெளியிடப்படவில்லை. இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.
மனுவைப் பெற்ற முதல்வா் ரங்கசாமி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.