மருத்துவா் வீட்டில் நகை திருட்டு: உறவினா் கைது

புதுச்சேரியில் மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகைகளைத் திருடியதாக, அவரது உறவினா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரியில் மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகைகளைத் திருடியதாக, அவரது உறவினா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி சவரிராயலு வீதியைச் சோ்ந்தவா் தருண்ராஜ் (35). தனியாா் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவியும் மருத்துவராவாா்.

கடந்த 2-ஆம் தேதி தருண்ராஜின் மனைவி பீரோவில் வைத்திருத்த நகையை எடுத்த போது, அதில் 11 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், தருண்ராஜ் மனைவியின் உறவினரான வெங்கடேஷ் தங்க நகைகளைத் திருடியது தெரிய வந்தது. கடந்த 1-ஆம் தேதி குடும்பத்தினருடன் வெளியூா் சென்ற தருண்ராஜ், திருச்சியிலிருந்து வந்திருந்த வெங்கடேஷை வீட்டை பாா்த்துக் கொள்ளுமாறு கூறினராம். அவா் 11 பவுன் நகைகளைத் திருடி விற்றது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

அவரை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com