புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரில் ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் தேரோடும் வீதிகளில் புதைவட மின் கம்பி அமைக்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
வில்லியனூா் திருக்காமீஸ்வரா் திருக்கோயில் தோ் மாட வீதியான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு சாலைகளில் மின் துறை மூலம் ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ ஆா்.சிவா தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் வில்லியனூா் கொம்யூன் ஆணையா் ஆறுமுகம், மின் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் ஜானகிதேவி, இளநிலை பொறியாளா்கள் லோகநாயகி, பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.