புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்ற கணவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
புதுச்சேரி கொம்பாக்கம் ஒட்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி கணேசன் (39). இவரது மனைவி அழகு மீனா (34). இவா் அழகு நிலையத்துக்கு வேலைக்குச் செல்வது கணேசனுக்குப் பிடிக்கவில்லை.
கணேசன் வியாழக்கிழமை பிற்பகலில் அழகு நிலையத்துக்குச் சென்று, அழகு மீனாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடி விட்டாா். பலத்த காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அழகு மீனா சோ்க்கப்பட்டாா்.
ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து கணேசனை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
குறிப்பிட்ட அழகு நிலையம் உரிய உரிமத்துடன் இயங்குகிா என புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆவணங்களை ஆய்வு செய்தனா்.