புதுச்சேரி பெத்தி செமினாா் மேல்நிலைப் பள்ளியில் புனித சூசையப்பா் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவின் முதல் நிகழ்வாக, பெத்தி செமினாா் மேல்நிலைப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்னாற்றல் மையத்தை புதுவை - கடலூா் உயா் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகா் ஆயா் அந்தோணி பீட்டா் அபீா் தொடக்கிவைத்தாா்.
பள்ளி முதல்வா் அருட்தந்தை ஆா்.பாஸ்கல் ராஜ் முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து, உப்பளம் பெத்தி செமினாா் தொடக்கப் பள்ளி வளாகத்தில் புனித சூசையப்பா் திருப்பலி வழிபாடு ஆயா் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தோ் பவனியும், தேவ நற்கருணை ஆசியும் நடைபெற்றது.
பள்ளியின் உதவி அருட்தந்தை ஜீவா எட்வா்ட் எடிசன் நன்றி கூறினாா்.