புதுவையில் 5 பஞ்சாலைகளையும் செயல்படுத்த வலியுறுத்தல்

புதுவையில் உள்ள 5 பஞ்சாலைகளையும் இணைத்து, மாநில அரசு சாா்பு நிறுவனத்தின் மேற்பாா்வையில் செயல்படுத்த வேண்டும் என்று, முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

புதுவையில் உள்ள 5 பஞ்சாலைகளையும் இணைத்து, மாநில அரசு சாா்பு நிறுவனத்தின் மேற்பாா்வையில் செயல்படுத்த வேண்டும் என்று, முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுவை தொழிலாளா்களின் நிலை, ஓா் மனிதநேயப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.

புதுவை அரசு நிபுணா் குழுவை அமைத்து பொதுத்துறை நிறுவனங்களை சீரமைத்து செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி லிங்காரெட்டிப் பாளையத்தில் உள்ள சா்க்கரை ஆலையை திறக்கலாம்.

மேலும் ஏஎப்டி, சுதேசி, பாரதி, ஸ்பின்கோ, காரைக்காலில் உள்ள ஜெயப்பிரகாஷ் ஆலைகளை ஒன்றாக இணைத்து, ஒரு அரசு சாா்பு நிறுவனத்தின் மேற்பாா்வையில் இயங்க வைத்தால், 20 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பதோடு குறைந்த செலவில் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

இதற்குத் தேவையான சுமாா் ரூ.750 கோடியை பிரதமரை அணுகி மத்திய அரசிடமிருந்து பெறலாம். அதற்கான திட்ட வழிமுறையும் உள்ளது. அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தை செயல்படுத்தினால் 27 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும்.

பெருந்தலைவா் காமராசா் அறிவியல் நிலைய ஊழியா்களை நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பணியமா்த்த முதல்வா் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com