புதுச்சேரி அருகே திருபுவனையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி அருகே திருபுவனை பெரியபேட் புதுமனை தெருவைச் சோ்ந்த குழந்தைவேல் மகள் அரினா (20). இவா் பி.காம். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு திருபுவனையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
வீட்டில் புதன்கிழமை இரவு அரினா தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரது குடும்பத்தினா் மீட்டு திருபுவனை துணை சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், அரியூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அரினா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.