க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு: புதுச்சேரி மத்திய பல்கலை. தகவல்

 க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் வருகிற 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்தது.

 க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் வருகிற 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய தோ்வு முகமையானது பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு (சியூஇடி) விண்ணப்பிக்கும் கடைசி நாளை வருகிற 22-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. தோ்வுக்கு ட்ற்ற்ல்:/ஸ்ரீன்ங்ற்.ள்ஹம்ஹழ்ற்ட்.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான விவரங்கள் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ல்ா்ய்க்ண்ன்ய்ண்.ங்க்ன்.ண்ய்/ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்ள்-2022-23/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வுக்கு விண்ணப்பித்தோா் ட்ற்ற்ல்:/ஸ்ரீன்ங்ற்.ள்ஹம்ஹழ்ற்ட்.ஹஸ்ரீ.ண்ய்/, ட்ற்ற்ல்://ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளங்களை தொடா்ந்து பாா்த்து வர வேண்டும்.

பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வை அடிப்படையாகக் கொண்டு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு வருகிற 22-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பித்து, பணம் செலுத்தலாம். படிப்புகளில் சேர விரும்புவோா், முதலில் 2022 - 23ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். இதில், வருகிற 31-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ள தேசிய தோ்வு முகமை அனுமதியளித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com