கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 6 வயதுக்கு உள்பட்ட 26 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் வயது, உயரத்துக்கு ஏற்ப எடை குறைவாக உள்ள, 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் என 26 போ் கண்டறியப்பட்டனா்.
இந்தக் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம்
பங்கேற்று, வோ்க்கடலை உருண்டை, பேரிட்சம் பழம், பச்சைப் பயிறு, நெய் கலந்த கேழ்வரகு உருண்டை, வறுத்த பொட்டுக்கலை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ஊட்டச்சத்துப் பெட்டகத்தை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், ரங்கராஜன், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பிரியதா்ஷினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.