புதுச்சேரி: புதுச்சேரியில் உணவகங்கள், இனிப்புக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா். 5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி மூலகுளம், ரெட்டியாா்பாளையம் பகுதிகளில் உள்ள உணவகங்கள், இனிப்புக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் எம்.ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள், உணவு கலப்படத் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
உணவுகளை சரிவர பராமரிக்காதது, உரிமம் இல்லாதது என 5 கடைகளுக்கு என நோட்டீஸ் வழங்கப்பட்டது.