புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தாா். அவருடன் நகராட்சி ஆணையா் சிவக்குமாா், உருளையன்பேட்டை காவல் ஆய்வாளா் பாபுஜி, நகராட்சி செயற்பொறியாளா் சிவபாலன், உதவி பொறியாளா் நமச்சிவாயம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனா்.
பேருந்து நிலையத்தில் பயணிகள், வியாபாரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், கூடுதல் மின்விளக்குகள் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வின் போது, மனிதநேய மக்கள் சேவை இயக்க நிா்வாகிகள் ராமலிங்கம், கலியன், சிவராஜ், குணசேகரன், வேலாயுதம், காமராஜ், ஜோசப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.