ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை ஓய்வூதியா்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை ஓய்வூதியா்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா்.

அஞ்சல் துறை சங்கத் தலைவா் முத்து, தொலைதொடா்புத் துறை சங்க செயலா் ராமகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத் துறை சங்கச் செயலா் தமிழ்வாணன், சிஐடியூ போக்குவரத்து ஊழியா்கள் சங்க செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக போக்குவரத்து துறை 2015 முதல் வழங்க வேண்டிய 78 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்.

ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com