புதுச்சேரியில் விஷ்வஹிந்து பரிஷத்தில் 5,000 பேரை உறுப்பினா்களாகச் சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதன் மாநிலப் பொறுப்பாளா் ஏ.வேல்முருகன் கூறினாா்.
புதுச்சேரியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது- விஷ்வஹிந்து பரிஷத் அகில உலக அமைப்பாகும். தேசிய இனப் பசுக்களை பாதுகாக்கும் வகையில் 4 லட்சம் பசுக்களை பராமரிக்கிறது.
வரும் 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் விஷ்வஹிந்து பரிஷத்துக்கு புதிய உறுப்பினா் சோ்ப்பு நடைபெறுகின்றன.
புதுச்சேரியில் 5 ஆயிரம் இளைஞா்களை பரிஷத்தில் இணைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
பேட்டியின்போது விஷ்வஹிந்து பரிஷத்தின் புதுவை மாநிலச் செயலா் எஸ்.ரவிவா்மன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.