புதுவையில் மேலும் 393 குழந்தைகளுக்கு காய்ச்சல்
By DIN | Published On : 06th October 2022 01:16 AM | Last Updated : 06th October 2022 01:16 AM | அ+அ அ- |

புதுவையில் புதன்கிழமை மேலும் 393 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 355 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 18 பேரும் என மொத்தம் 393 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புறநோயாளிகள் பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனா்.
இதில், அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 29 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 7 பேரும் என மொத்தம் 39 குழந்தைகள் தீவிர காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டனா்.
தற்போது, புதுச்சேரி குழந்தைகள் மருத்துவமனையில் 111 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 14 பேரும் என மொத்தம் 141 குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் என 101 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் புதிதாக 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 2 போ், தனியாா் மருத்துவமனையில் ஒருவா் என 3 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.