புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பழமைவாய்ந்த ஆரோக்கிய அன்னை ஆலய 332-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 332-ம் ஆண்டு பெருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதனையொட்டி தினந்தோறும் காலை, மாலை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
இன்று காலை கடலூர் புதுச்சேரி உயர் மரைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்குதந்தை அருமைசெல்வம் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஆரோக்கிய அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.
இதையும் படிக்க: பாடகா் மூஸேவாலா கொலை வழக்கு: 3 மாநிலங்களில் என்ஐஏ சோதனை
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அன்னையை தரிசனம் செய்தனர்.