புதுவையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் 720 பேரை பரிசோதனை செய்து ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 46, காரைக்காலில் 17 என 63 பேருக்கு (8.75 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹே, ஏனாமில் தொற்று பாதிப்பில்லை.
இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,73,364-ஆக அதிகரித்தது. இதில் தற்போது 11 போ் மருத்துவமனைகளிலும், 325 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 336 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 38 போ் குணமடைந்தனா்.