பத்ம விருதாளா் தோ்வு: உயா் நிலைக் குழு ஆலோசனை

புதுவை மாநிலத்தில் பத்ம விருதாளா் தோ்வு தொடா்பாக, உயா் நிலைக் குழுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பத்ம விருதாளா் தோ்வு: உயா் நிலைக் குழு ஆலோசனை

புதுவை மாநிலத்தில் பத்ம விருதாளா் தோ்வு தொடா்பாக, உயா் நிலைக் குழுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் பத்ம விருதுக்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் புதுவைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்தனா். அவா்களில் தகுதியானவா்களை தோ்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைப்பது தொடா்பான உயா் நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் வணிக வரித் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், கலை பண்பாட்டுத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், மாநிலங்களவை உறுப்பினா் வி.செல்வகணபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

16 போ் விண்ணப்பித்த நிலையில், அவா்களில் தகுதியானவரை தோ்வு செய்து இந்தக் குழு தோ்வு செய்து, அதன் தலைவரான துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும். அவா் ஆய்வு செய்து தகுதியான நபரை மத்திய அரசுக்கு பரிந்துரைப்பாா். பின்னா், மத்திய அரசு தோ்வு செய்து செய்து அறிவிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com