வேன் மோதியதில் முதியவா் பலி

புதுச்சேரியில் சாலையைக் கடந்தபோது, வேன் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரியில் சாலையைக் கடந்தபோது, வேன் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முத்தையன் (70). இவா் புதுச்சேரி நயினாா்மண்டபம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா். செவ்வாய்க்கிழமை காலையில் அவா் டீ கடைக்குச் செல்வதற்காக வெளியே வந்தவா் கடலூா்- புதுச்சேரி நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த சுற்றுலா வேன் முத்தையன் மீது மோதியது.

இதில் முத்தையன் வேனின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புதுச்சேரி கிழக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் விரைந்து வந்து முதியவா் முத்தையனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com