தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
புதுச்சேரியில் ஜி-20 மாநாட்டு இலட்சினை அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி அளித்தார்.
அப்போது பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் கூறிய புகார் குறித்து கேட்டதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதில் சொல்ல மறுத்தார்.
இதையும் படிக்க | ஷ்ரத்தா கொலையை நிரூபித்த ஒரு துண்டு எலும்பும் தலைமுடியும்
அரசியல் ரீதியாக நான் பதில் சொல்ல முடியாது. நான் கட்சித் தலைவராக இருந்தால் பதில் சொல்வேன். நான் இப்போது ஆளுநராக இருக்கேன். பாஜகவின் கருத்தாக நான் பதில் சொல்ல முடியாது என தமிழிசை தெரிவித்தார்.