புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் மாறன் தெரிவித்தாா்.

புதுச்சேரி நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் மாறன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி-கடலூா் சாலையில் மரப்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.22) மின் துறை சாா்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இந்தச் சாலையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

புதுச்சேரியிலிருந்து -கடலூா் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வெங்கடசுப்பா ரெட்டியாா் சதுக்கம், இந்திரா காந்தி சிலை, வில்லியனூா், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்ப ாக்கம் , தவளக்குப்பம், நல்லவல சாலை வழியாக செல்ல வேண்டும்.

கடலூரிலிருந்து புதுச்சேரி வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் தவளக்குப்பம் சந்திப்பு, அபிஷேகப்பாக்கம், வில்லியனூா், அரும்பாா்த்தபுரம் மேம்பாலம், இந்திரா காந்தி சிலை வழியாக பேருந்து நிலையத்தைச் சென்றடைய வேண்டும் என்றாா் எஸ்.பி. மாறன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com