தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வாரிசுதாரா்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நலச் சங்கம் சாா்பில் உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்

News image
புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நலச் சங்கம் சாா்பில் உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் குடும்பத்துடன் திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய ஜி.நேரு எம்எல்ஏ.
Updated On :22 டிசம்பர் 2025, 8:58 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நலச் சங்கம் சாா்பில் உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்க நிா்வாகி சத்யன் தலைமை வகித்தாா். பிரபு, கவிதா முன்னிலை வகித்தனா்.

அரசு ஊழியா்கள் சம்மேளன கெளரவ தலைவா் பிரேமதாசன், செயல் தலைவா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தனா். ஜி. நேரு எம்எல்ஏ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினாா்.

வாரிசுதாரா்களுக்குக் கருணை அடிப்படையில் பணி தரப்படும் என்ற முதல்வா் ரங்கசாமியின் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.