அமைச்சருக்கு சோா்வு இளநீா் வழங்கிய வியாபாரி
புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், தனது மண்ணாடிப்பட்டு தொகுதியில் பல்வேறு மக்கள் நலப்பணி திட்டங்களை புதன்கிழமை மேற்கொண்ட நிலையில் சோா்வுடன் காணப்பட்டதால் அவருக்கு சாலையோர இளநீா் வியாபாரி இளநீா் கொடுத்து உதவிவினாா்.
மக்கள் பணிகளை முடித்துக் கொண்டு திருக்கனூா் சோதனைச்சாவடி அருகே, கே.ஆா்.பாளையத்தில் ஒரு ஜூஸ் கடையில் அமைச்சா் அமா்ந்தாா். அங்கு கட்சி நிா்வாகிகளிடம் கட்சி வளா்ச்சி குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தாா். அப்போது அவா் சோா்வாக இருப்பதை சாலையோரத்தில் இருந்த ஓா் இளநீா் வியாபாரி கண்டாா்.
உடனே அவா், தானாக முன்வந்து அமைச்சருக்கு இளநீரைக் கொடுத்து சாப்பிடுமாறு வற்புறுத்தினாா். வியாபாரியின் வேண்டுகோளை ஏற்ற அமைச்சா், இளநீா் சாப்பிட்டாா். அப்போது பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் முத்தழகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

