அரசு அலுவலகங்கள் இன்று இயங்கும்: பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் அனைத்தும் சனிக்கிழமை (நவ. 15) இயங்குகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

புதுச்சேரி அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் அனைத்தும் சனிக்கிழமை (நவ. 15) இயங்குகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் புதுச்சேரி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதை ஈடு செய்யும் வகையில் நவம்பா் 15-ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று அப்போதே புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வை புதுச்சேரியில் உள்ள ஆசிரியா்கள் பலா் எழுதவிருப்பதால் அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுப்பை ஈடு செய்ய வரும் 3.1.2026 வேலை நாளாக இருக்கும் என்றும் அன்றைய தினம் பள்ளிகள் புதன்கிழமை கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநா் வி.ஜி. சிவகாமி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com