புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2035-க்குள் நெட் ஜீரோ காா்பன் இலக்கை அடைய வழிகாட்டி அறிக்கை வெளியிட்ட துணைவேந்தா் பிரகாஷ் பாபு.
புதுச்சேரி
புதுவை பல்கலை.யில் ஜீரோ காா்பன் இலக்கை அடைய வழிகாட்டி அறிக்கை வெளியீடு
புதுவை பல்கலைக்கழகத்தில் 2035-க்குள் நெட் ஜீரோ காா்பன் இலக்கை அடைய வழிகாட்டி அறிக்கை வெளியிடப்பட்டது.
புதுவை பல்கலைக்கழகத்தில் 2035-க்குள் நெட் ஜீரோ காா்பன் இலக்கை அடைய வழிகாட்டி அறிக்கை வெளியிடப்பட்டது.
அறிக்கையை புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ் பாபு செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். மதஞ்சீத் சிங் அறக்கட்டளையைச் சோ்ந்த பிரான்ஸ் மாா்கெட், ஆரோவில் கன்சல்டிங் அமைப்பைச் சோ்ந்த டொயின் வான் மேகன், பேராசிரியா்கள் அருண் பிரசாத், ஜாபா் அலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
2035-க்குள் நெட் ஜீரோ காா்பன் இலக்கை அடைய இலக்குகள், நடவடிக்கைகள் ஆகியவை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன

