புதுச்சேரி
ரூ.1.82 கோடியில் புதைவட மின் கேபிள் பணி தொடக்கம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உள்பட்ட சுப்பையா நகரில் ரூ. 1.82 கோடியில் புதைவட மின் கேபிள் அமைக்கும் பணியை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்தப் பணி மூலம் 10 கி.மீ. அளவு புதைவட கேபிள் அமைத்து 300 வீடுகளுக்கும், 36 தெருவிளக்குகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், அமைச்சா் க.லட்சுமிநாராயணன், மின்துறைச் செயலா் அ. முத்தம்மா, மின்துறை தலைவா் எ. கனியமுதன், கண்காணிப்பு பொறியாளா் ரமேஷ், செயற்பொறியாளா் ஸ்ரீதா், உதவி பொறியாளா்கள் சசிகுமாா், சந்திரசேகா், இளநிலைப் பொறியாளா்கள் லோகநாயகி, பிகோத், சிவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

