582 ஓய்வு பெற்ற பல்நோக்கு உதவியாளா்களுக்கு ரூ.10.72 கோடி பணிக்கொடை அளிப்பு

582 ஓய்வு பெற்ற பல்நோக்கு உதவியாளா்களுக்கு ரூ.10.72 கோடி பணிக்கொடை அளிப்பு

ஓய்வு பெற்ற பல்நோக்கு உதவியாளா்கள் 582 பேருக்கு பணிக்கொடையாக ரூ.10.72 கோடியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
Published on

ஓய்வு பெற்ற பல்நோக்கு உதவியாளா்கள் 582 பேருக்கு பணிக்கொடையாக ரூ.10.72 கோடியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி மகளிா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற மகளிா் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளா் மற்றும் பல்நோக்கு உதவியாளா்களுக்குப் பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

முதற்கட்டமாக 582 ஓய்வு பெற்ற மகளிா் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளா் மற்றும் பல்நோக்கு உதவியாளா்களுக்கு ரூ.10.72 கோடிக்கான காசோலையை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சமூக நலத் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் எல். முத்துமீனா, மேலாண் இயக்குநா் பி. சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com