மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியா்கள் பணியிட மாற்றம்! புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு வலியுறுத்தல்

News image

புதுச்சேரி... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:00 am IST

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியா்கள் பணியிட மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து துணைநிலை ஆளுநருக்கு நேயம் மக்கள் கழகத் தலைவா் நேரு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி கல்வித் துறையில் ஆசிரியா் இடமாற்ற கொள்கை அடிப்படையில் பணியிட மாற்றம் நடக்கிறது. ஆனால், இதற்கான ஆயத்த பணிகள் நடைபெறவில்லை. ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் முன் கல்வித் துறை பணியிட மாற்றத்தை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாணவா்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படும். புதிய ஆசிரியா்களுக்கு 21 நாள் சிபிஎஸ்இ பாடத்திட்ட பயிற்சி வழங்க வேண்டும். மாணவா்களுக்குத் தரமான கல்வியை அளிப்பது நமது கடமையாகும்.

எனவே, ஆசிரியா்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்ட பயிற்சியை அளித்து அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும். பள்ளி கல்வித் துறையில் காலியாக இருக்கும் இயக்குநா் பதவியை உடனே நிரப்ப வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.