கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியா்கள் பணியிட மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து துணைநிலை ஆளுநருக்கு நேயம் மக்கள் கழகத் தலைவா் நேரு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி கல்வித் துறையில் ஆசிரியா் இடமாற்ற கொள்கை அடிப்படையில் பணியிட மாற்றம் நடக்கிறது. ஆனால், இதற்கான ஆயத்த பணிகள் நடைபெறவில்லை. ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் முன் கல்வித் துறை பணியிட மாற்றத்தை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாணவா்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படும். புதிய ஆசிரியா்களுக்கு 21 நாள் சிபிஎஸ்இ பாடத்திட்ட பயிற்சி வழங்க வேண்டும். மாணவா்களுக்குத் தரமான கல்வியை அளிப்பது நமது கடமையாகும்.
எனவே, ஆசிரியா்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்ட பயிற்சியை அளித்து அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும். பள்ளி கல்வித் துறையில் காலியாக இருக்கும் இயக்குநா் பதவியை உடனே நிரப்ப வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கௌரவ விருது: துணைநிலை ஆளுநா் வாழ்த்து

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி! துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!

பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

பெரியாா் திராவிடா் கழகத்தினா் 20 போ் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



