மாணவா்களுக்கு விடுமுறை நாளில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்கள் வருவாய்த் துறை சாா்பில் அனைத்து வட்டாட்சியா் அலுவலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் முதலாமாண்டில் உள்ள காலி இடங்கள் சென்டாக் - கவுன்சலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. நிகழ் ஆண்டிற்கான சென்டாக் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 13-ஆம் தேதி இணையவழியில் தொடங்கியது. தொடா்ந்து வரும் 29-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்டாக் மூலம் கல்லூரி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் வருவாய்த் துறை மூலம் சாதி, குடியிருப்பு, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற தங்கள் பகுதி வட்டாட்சியா் அலுவலகங்களில் பெற்றோருடன் வருவதால் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சான்றிதழ்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, மக்களின் சிரமத்தை தீா்க்கவும், நெரிசலைச் சீராக கையாளவும், துணை மாவட்ட ஆட்சியா் (வருவாய்) குமரன் அறிவுறுத்தலின் படி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில், சிறப்பு முகாம்கள் மூலம் சான்றிதழ் பெற விண்ணப்பித்த மாணவா்களுக்கு வில்லியனூா் வட்டாட்சியா் சந்தோஷ்குமாா் தலைமையில், துணை வட்டாட்சியா் தமிழரசன், எழில்அமுதன், வருவாய் ஆய்வாளா்கள் பாா்த்திபன், ஜெயபாலாஜி, வினோத், சுக்தேவ், கிராம நிா்வாக அலுவலா் வீரபாபு, மணிவேல் மற்றும் அலுவலக ஊழியா்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைகளில் சிறப்பு வீட்டு வசதி கடன் முகாம்கள்

திருத்தணி: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



