திருக்கோவிலூர் அருகே முனிவாழை கிராமத்தில் அரசின் ஆரோக்கியத் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் ஜி.வெற்றிவேல் முருகன் தலைமை வகித்தார்.
ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் எம்.நிரஞ்சனா, ஜி.விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இரா.தெய்வீகன் வரவேற்றார்.
முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய், எய்ட்ஸ் மற்றும் சிறுநீரகக் கல் பரிசோதனைகளை செய்யப்பட்டன. தொடர் சிகிச்சை தேவைப்பட்டோருக்கும் மருத்துவப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
கிராம சுகாதார செவிலியர்கள் சாந்தி, ஜெயந்தி, மலர், சுகந்தி, ஜெயலலிதா, புவனேஸ்வரி, கனகவள்ளி, எஸ்தர்கிரிடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.