விழுப்புரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியை அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மனைவி கனகாம்பரம் (58). இவர் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
அப்போது, வீட்டின் முன் மின் கம்பி அறுந்து கிடந்ததைக் கவனிக்காமல், அதை மிதித்து விட்டார்.
இதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே கனகாம்பரம் உயிரிழந்தார். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.