வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா

திருக்கோவிலூர் - கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில், வைகாசி விசாகப் பெருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது.
Updated on
1 min read

திருக்கோவிலூர் - கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில், வைகாசி விசாகப் பெருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது.
இந்தக் கோயிலில், வைகாசி விசாகப் பெருவிழா கடந்த
29-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் வெகு விமரிசையாக விழா நடைபெற்றது. விழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை, காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன, பஞ்சவர்ண பூஜைகள் செய்து, வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் பூஜை நடைபெற்று, பரனூர் அம்பலவாணர் சுவாமிகளின் கந்தபுராண தொடர் சொற்பொழிவு நிறைவடைந்து, உற்சவ மூர்த்திகளுக்கு சோடசோபஸார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஆலய வலமாக கோபுர தரிசனத்துடன் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.
வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு, வியாழக்கிழமை (ஜூன் 8) காலை 9 மணிக்கு சம்ஹாரமூர்த்தி மகா பைரவருக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com