சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கக் கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபயண பிரசார வரவேற்புக் கூட்டம், உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிச் செயலாளர் ஏ.ஜெ.ரமேஷ் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் க.தங்கராசு வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலர் கே.சாமுவேல்ராஜ், மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் டி.ஏழுமலை, வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எம்.செந்தில் ஆகியோர் நடைபயண பிரசார விளக்கவுரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு எம்.ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலர் சே.க.சேரன், ஒன்றியச் செயலர் தங்க.ரமேஷ், நகரக் குழு பி.ஸ்டாலின், பி.ஆர்.நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.