சுகாதாரத் துறை மாநில அமைச்சுப் பணியாளர்கள் செயல்திறன் கூட்டு இயக்கம் (ஜாஸ்மின்ஸ் சங்கம்) சார்பில், தமிழக அரசு அமைத்துள்ள ஊதியக் குழுவுடனான பேச்சு வார்த்தை அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் தலைமை வகித்தார். ஜாஸ்மின்ஸ் சங்க நிறுவனர் ஆர்.சாய்ராம், மாநிலத் தலைவர் விழுப்புரம் ம.ரா.சிங்காரம், மாநில துணைத் தலைவர் ப.இளங்கோவன், பொதுச் செயலர் பி.ஜெயக்குமார், திருச்சி மாவட்டத் தலைவர் ஏ.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுகாதாரத் துறையில் அமைச்சுப் பணியாளர்களின் ஊதிய மேம்பாடு, 7 ஆண்டுகளுக்குத் தேர்வு நிலை, 14 ஆண்டுகளுக்கு சிறப்பு நிலை, 21 ஆண்டுகள் பணியாற்றினால் சிறப்பு தேர்வு நிலை ஆகியவையும், பதவி உயர்வு வாய்ப்புகள் 5 ஆண்டுகளிலும், தேர்வு நிலை ஊதியம், அடுத்த பதவி உயர்வுக்கான ஊதியத்தை நிர்ணயித்தல் வேண்டும்.
தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு 9 சதவீத ஊதிய உயர்வும், பதவி உயர்வுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வும், மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்துப் படிகளையும் வழங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் கோரிக்கை வைத்தனர். ஊதியக்குழு பரிந்துரை செய்வதாக உறுதியளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.