மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை, மாலை விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, இரவு 7 மணியளவில் அலங்காரம் செய்து, அர்ச்சனை நடைபெற்றது. விநாயகர் அகவல், துதிப்பாடல்கள், நாமாவளிகள், இசையுடன் பக்தர்கள் பாடிய பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல மொட்டை விநாயகர், வாசவாம்பாள், நைனார்வீதி, வாணியர் வீதி, கீழ் பென்னாத்தூர் சாலையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.