விழுப்புரம் அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (50). கூலித் தொழிலாளி. இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிவேலு (42). இருவரும் சின்னக்கள்ளிப்பட்டில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலையை முடித்துவிட்டு, மாட்டுவண்டியில் பஞ்சமாதேவி கிராமத்தை நோக்கி புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி, மாட்டுவண்டி மீது மோதியதில் அஞ்சாபுலி, பழனிவேல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அஞ்சாபுலி இறந்தார். வளவனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.