செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தாய், மகள் காயமடைந்தனர்.
செஞ்சி பெரியகரம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது உறவினர் சரளா (26). இவரது மகள் கலைச்செல்வி (6). இவர்கள் இருவரும் அரசுப் பேருந்தில் இருந்து இறங்கி பரதன்தாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்தனர்.
அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சத்தியமங்கலம் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.