உளுந்தூர்பேட்டையில் நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு வழங்குவது குறித்து வணிகர்களுக்கான ஆலேசனைக் கூட்டம், வியாபார சங்கத் தலைவர் எஸ்.டி.எம்.முகமது கனி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி கலந்துகொண்டு, நுகர்வோர்களுக்கு சுகாதாரத்துடன் கூடிய உணவை வழங்க வேண்டும் என்றும், பிளாஷ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருள்களைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வணிகர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் முருகன், கதிரவன், இப்ராஹிம், சரவணன், ஜெயராஜ், ரமேஷ் மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.