மயிலம் அடுத்த கொல்லியங்குணத்தில் இயங்கி வரும் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் ஜாஸ்லின்தம்பி தலைமை வகித்தார். செயலர் பிரபலா.ஜெ.ராஸ் வரவேற்றார்.முதல்வர்(பொ) முனைவர் எஸ்.சுதா கிறிஸ்டிஜாய் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முருகன் 469 மாணவ, மாணவிகளுக்கு இளங்கலை பட்டங்களையும் 181 மாணவ, மாணவிகளுக்கு முதுகலைப் பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
பவ்டா தலைமை நிர்வாக அலுவலர் ஜோஸ்வந்த்ஆனந்த், முதுகலை மேலாளர்கள் கோவிந்தராஜ்,சிவராஜ், டேவிட் ஆனந்த், பாலசுப்ரமணியன், பவ்டா பள்ளி முதல்வர் கிருஷ்ணசாமி, துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர்(பொறுப்பு) வி.சேகர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.