பைக்கில் இருந்து விழுந்த விவசாயி சாவு

வளவனூர் அருகே குமரமங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(57), விவசாயி. இவர், திங்கள்கிழமை மாலை
Published on
Updated on
1 min read

வளவனூர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.
 வளவனூர் அருகே குமரமங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(57), விவசாயி. இவர், திங்கள்கிழமை மாலை குமரங்குப்பத்தில் இருந்து வளவனூருக்குச் செல்ல குமரங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
 அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில், லிப்ட் கேட்டு ஏறினார். வளவனூரில் உள்ள தனியார் பள்ளி அருகே புதுவை-விழுப்புரம் சாலையில் சென்றபோது, நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து ஏழுமலை கீழே விழுந்தார். அதில், பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக, புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஏழுமலை, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
 வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com