எம்எல்ஏ மீதான வழக்கு தள்ளுபடி

போலி வாக்காளர்களை சேர்த்ததாக, உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ இரா.குமரகுரு மீது தொடுக்கப்பட்ட வழக்கு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
Updated on
1 min read

போலி வாக்காளர்களை சேர்த்ததாக, உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ இரா.குமரகுரு மீது தொடுக்கப்பட்ட வழக்கு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
 இரா.குமரகுரு எம்எல்ஏ மீது, கடந்த 2006-ஆம் ஆண்டு முகையூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில், போலி வாக்காளர்களை சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
 அதனடிப்படையில், அப்போதைய தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் முத்தையா, திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 போலி வாக்காளர்களை சேர்த்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லாததால், வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, இரா.குமரகுரு தரப்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை நீதிபதி பத்மாவதி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, வழக்குத் தொடர்ந்த வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆஜராகாததால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
 இரா.குமரகுரு தரப்பில், வழக்குரைஞர்கள் எஸ்.துரைப்பாண்டியன், கே.உமாசங்கர் ஆகியோர் ஆஜராகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com