மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அ.சதீஷ் வரவேற்றார். ச.திருநாவுக்கரசு அறிமுக உரையாற்றினார்.
கல்லூரியின் செயலரும் பொம்மபுர ஆதீனத்தின் 20ஆம் பட்டம் சுவாமிகள் தலைமை தாங்கினார். முதல்வர் சு.விஜயகாந்தி,மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டி.தேன்மொழி, திண்டிவனம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ஏ.எஸ்.அன்பரசி வாழ்த்துரை வழங்கினர். சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோபிநாத் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.