பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மயிலம் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் 

மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் 6-ஆவது தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:48 am IST

மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் 6-ஆவது தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
 மின்னியல், மின்னணுவியலில் அறிவார்ந்த கணினி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு கல்லூரித் தலைவர் ம.தனசேகரன் தலைமை வகித்தார்.
 துணைத் தலைவர் சுகுமாறன், செயலர் நாராயணசாமிகேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். டீன் ராஜப்பன் வாழ்த்துரை வழங்கினார்.துறைத் தலைவர் முரளிகிருஷ்ணன் வரவேற்றார்.
 சிறப்பு விருந்தினராக அருணை பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் சரவணன் கலந்து கொண்டு நவீன கால தொழில்நுட்பங்களின் பங்களிப்பு பற்றியும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறையில் ஏற்படக்கூடிய ஆராய்ச்சி மாற்றங்கள் குறித்தும் விளக்கினார். முதுநிலை, இளநிலை மாணவ, மாணவிகள் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர்கள் முத்துக்குமார் மற்றும் ரேகா செய்திருந்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.