மணல் கடத்தல்: 3 பேர் கைது

பெரியதச்சூர் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெரியதச்சூர் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அருகேயுள்ள பெரியதச்சூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை ரோந்து சென்றனர். அப்போது, மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், நெடி கிராமத்தில் உள்ள தொண்டி ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வருவது தெரிய வந்தது. இதையடுத்து, நெடி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்(40), ரமணி(45), சேட்டு(42) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com