பெரியதச்சூர் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அருகேயுள்ள பெரியதச்சூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை ரோந்து சென்றனர். அப்போது, மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், நெடி கிராமத்தில் உள்ள தொண்டி ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வருவது தெரிய வந்தது. இதையடுத்து, நெடி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்(40), ரமணி(45), சேட்டு(42) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.