திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜாகிர்பாஷா மகன் ரஹிப் (34), முகமது மகன் தாஜா(35), இப்ராஹிம் மகன் அப்பாஸ் (40), ராஜேந்திரனின் மகன்கள் ராமச்சந்திரன்(29) மற்றும் ராஜி(25).இவர்கள் அனைவரும் அங்குள்ள ஏரிக்கரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தினர். அப்போது, அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் அசோக்குமாரை (25) ரஹிப், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் காயமடைந்த அசோக்குமார் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து திண்டிவனம் போலீஸார் வழக்கு பதிந்து ரஹிப் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.