விழுப்புரத்திலிருந்து மேற்குவங்கம் மாநிலம் புருலியாவுக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயில், "டிட்லி' புயல் தாக்கம் காரணமாக, ஒரு நாள் தாமதமாக ஞாயிற்றுக்கிழமை (அக்.14) புறப்படுகிறது.
வழக்கமாக, விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமைகளில் புறப்பட்டு புருலியாவுக்கு செல்லும் இந்த வாராந்திர விரைவு ரயில், அக்.13 பகல் 11.40-மணிக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புருலியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.