தமிழக முதல்வர் பங்கேற்கும்: அதிமுக பொதுக்கூட்டத்துக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

உளுந்தூர்பேட்டையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்துக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

உளுந்தூர்பேட்டையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்துக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
அதிமுக 47-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம், உளுந்தூர்பேட்டையில் வருகிற 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
 இந்தப் பொதுக் கூட்டத்துக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று, பூமி பூஜை செய்து பொதுக்கூட்ட மேடை, பந்தல் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் இரா.குமரகுரு எம்எல்ஏ, எம்.பி.க்கள் காமராஜ் (கள்ளக்குறிச்சி) , எஸ்.ராஜேந்திரன் (விழுப்புரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் ஜி.மணிராஜ், நகரச் செயலாளர் எஸ்.துரை, முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் இரா.சாய்ராம், மாநில பொதுக் குழு உறுப்பினர் வளர்மதி பாண்டியராஜ், ஒன்றியச் செயலாளர்கள் திருநாவலூர் ஏ.ஆர்.செண்பகவேல், தியாகதுருகம் வி.அய்யப்பா, மாவட்ட துணைச் செயலாளர் எம்.பரமாத்மா, முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு, செங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சம்பத் அய்யர், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் இராம.ஏகாம்பரம் உள்பட விழுப்புரம் தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com