தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் செஞ்சி வட்டக் கிளை தேர்தல் வட்டார வளமைய பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சு.நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் பி.முருகேசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
தேர்தல் அலுவலர்களாக கௌ.முகமதுகாஜா மாவட்ட துணைத் தலைவர் கே.சி.சடகோபன் ஆகியோர் செயல்பட்டனர்.
இதில் சங்கத் தலைவராக எ.பூவழகன், செயலராக பி.படவட்டான், பொருளாளராக வா.விஜேந்திரன், துணைத் தலைவர்களாக வே.இளவரசு, பி.கணபதி, பி.வெங்கடேசபெருமாள், பி.ஜெயந்தி, இணைச் செயலர்களாக க.தாமோதரன், இ.விஜயரங்கன், எஸ்.ரவி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர் கு.முருகன் நன்றி கூறினார்.